திருவள்ளூரில் பரபரப்பு அரசுப் பேருந்து மீது மோதிய லாரி

திருவள்ளூர்,  பிப்.21: அரசுப் பேருந்து மீது லாரி மோதியதில், 12 பேருக்கு  காயம் ஏற்பட்டது.  திருவள்ளூர் மாவட்டம் திருத்தணியில் இருந்து திருவள்ளூர் நோக்கி  என்ற அரசு பேருந்து(தடம் எண்: 97)  காலை 9 மணியளவில் 90 பயணிகளுடன் புறப்பட்டது.  லட்சுமிபுரம் என்ற பகுதியில் வந்து கொண்டிருந்தது. அப்போது பேருந்தின் பின்னால் வந்த டிப்பர் லாரி அரசுப் பேருந்தின் பின்புறம் பலமாக மோதியது. இந்த விபத்தில் பேருந்தின் பின்புற சீட்டில் அமர்நதிருந்த 10 பேருக்கு லேசான காயம் ஏற்பட்டது.  திருத்தணியை சேர்ந்த குமுதன் (34), ஆற்காடு குப்பத்தைச் சேர்ந்த ஆசிரியர் ஓங்காரம் (60) ஆகிய 2 பேருக்கு பலத்த காயமும் ஏற்பட்டது.

அக்கம்பக்கத்தினர்  காயம் அடைந்தவர்களை மீட்டு, 108 ஆம்புலன்ஸ் மூலம் திருத்தணி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.  அதிர்ஷ்டவசமாக உயிர் சேதம் எதுவும் இல்லை என காவல் துறையினர் தெரிவித்தனர். இச்சம்பவத்தால், அப்பகுதியில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

Related Stories: