சத்தியமங்கலம், பிப்.21: பண்ணாரி சோதனை சாவடியில் சிறுத்தை நடமாட்டம் உள்ளதால் வாகன ஓட்டிகள், வாகனத்தை விட்டு கீழே இறங்க வேண்டாம் என வனத்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது. சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்தில் புலி, சிறுத்தை, யானை உள்ளிட்ட பல்வேறு வகையான வனவிலங்குகள் வசிக்கின்றன. இந்த வனப்பகுதி வழியாக தமிழகம் மற்றும் கர்நாடக மாநிலங்களை இணைக்கும் சத்தியமங்கலம் - மைசூர் தேசிய நெடுஞ்சாலை அமைந்துள்ளது. இந்த சாலையில் சிறுத்தை, யானை உள்ளிட்ட வனவிலங்குகள் கடந்து செல்வது வழக்கமாக உள்ளது.இந்த நிலையில் நேற்று காலை சாலையோரத்தில் சிறுத்தை நடமாடியது.