பொன்னேரி, அக். 1: காட்டுப்பள்ளி ஊராட்சியில் உள்ள அரசு பள்ளி வளாகத்தில் இலவச கண் சிகிச்சை முகாம் நடந்தது. திருவள்ளூர் மாவட்டம் மீஞ்சூர் ஒன்றியத்துக்கு உட்பட்ட காட்டுப்பள்ளி ஊராட்சியில் உள்ள அரசு பள்ளி வளாகத்தில் இலவச கண் சிகிச்சை முகாம் நேற்று முன்தினம் நடந்தது. இந்த முகாமை காட்டுப்பள்ளி ஊராட்சி மன்ற தலைவர் வழக்கறிஞர் சேதுராமன் துவக்கி வைத்தார். துணைத் தலைவர் வினோதினி வினோத், ஊராட்சி செயலர் நாகஜோதி முன்னிலை வகித்தனர்.