திருச்சி,அக்.1: அகில இந்திய அளவில் முகவர்கள் சங்கங்களின் கூட்டுக்குழு இணைந்து நடத்தும் மாபெரும் தொடர் போராட்டம் ஜங்ஷன் எல்ஐசி அலுவலகத்தில் நேற்று நடைபெற்றது. தஞ்சை கோட்டத்தில் உள்ள அனைத்து முகவர்களும் இதில் கலந்து கொண்டனர். இந்த போராட்டத்தில் பாலிசிதாரர்களுக்கான பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து பாலிசிக்கான போனசை உயர்த்த வேண்டும். பாலிசி கடனுக்கான வட்டி விகிதத்தை குறைக்க வேண்டும்.