விவசாயிகள் குறைதீர் கூட்டத்தில் வலியுறுத்தல் காந்திஜெயந்தி, மிலாடிநபி அக்.2, 9ம்தேதி மதுக்கடைகள் இயங்காது

பெரம்பலூர், அக்.1: காந்தி ஜெயந்தி மற்றும் மிலாடி நபி விழாக்களை முன்னிட்டு டாஸ்மாக் மற்றும் தனியார் மதுபான கூடங்கள் அனைத்திற்கும் நாளை (2ம் தேதி) மற்றும் 9ஆம் தேதி ஆகிய தேதிகளில் விடுமுறை அறிவிக்கப்படுவதாக கலெக்டர் வெங்கடபிரி யா தெரிவித்துள்ளார். இதுகுறித்து கலெக்டர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்திருப்பதாவது: பெரம்பலூர் மாவட்டத்தில் இயங்கி வரும் தமிழ்நாடு வாணிப கழகத்தின் (டாஸ்மாக்) அனைத்து மதுபான சில்லறை விற்பனை கடை கள், சில்லறை விற்பனைக் கடைகளுடன் இணைந்த மதுக்கூடங்கள் மற்றும் எப் எல்-3 உரிமம் பெற்ற தனி யார் மதுபானக் கூடங்கள் (பார்கள்) அனைத்திற்கும் காந்திஜெயந்தியான நாளை (2ம்தேதி) ஞாயிற்றுக்கிழமை மற்றும் மிலாடிநபி (9ம் தேதி) ஞாயிற்றுக்கிழமை ஆகிய 2 நாட்களுக்கு உலர் தினமாக, (டிரை-டே) விடுமுறை நாளாக அறிவிக்கப்படுகிறது என கலெக்டர் தெரிவித்துள்ளார்.

Related Stories: