தண்டையார்பேட்டை: புது வண்ணாரப்பேட்டை பல்லவன் நகரை சேர்ந்தவர் சூர்யா (30). காசிமேடு பகுதியில் கஞ்சா விற்பனை செய்து வந்த இவரை, காசிமேடு மீன்பிடி துறைமுக போலீசார் கடந்த 2018ம் ஆண்டு கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். இந்த வழக்கு போதை பொருள் சிறப்பு நீதிமன்றத்தில் நடந்து வந்தது. நீதிபதி திருமகள் முன்பு இந்த வழக்கு நேற்று விசாரணைக்கு வந்தது.