திருவள்ளூர், செப்.30: மாடுமேய்க்க சென்றபோது பாலியல் தொல்லையால் பாதிக்கப்பட்ட சிறுமி தீக்குளித்தார். அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டுவரும் நிலையில், போக்சோ சட்டத்தில் 4 பேரை கைது செய்தனர்.
திருவள்ளூர் அடுத்த மோவூர் கிராமத்தை சேர்ந்தவர் 17 வயது சிறுமி. இவர் மாடு மேய்க்கசென்றபோது அதே பகுதியை சேர்ந்த 4 இளைஞர்கள் அந்த சிறுமிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்துள்ளனர். பின்னர் அவற்றை செல்போனில் வீடியோ பதிவு செய்துவிட்டு மிரட்டியதாக தெரிகிறது. இதனால் அவமானம் அடைந்த அந்த சிறுமி, மண்ணெண்ணெய் ஊற்றி தற்கொலைக்கு முயன்றுள்ளார். இதுசம்பந்தமாக சிறுமியின் உறவினர்கள் மற்றும் தமிழர் படையின் தலைவர் கி.வீரலட்சுமி ஆகியோர் திருவள்ளூர் எஸ்பி அலுவலகத்தில் புகார் கொடுத்தனர்.