சிவகங்கை, செப்.30: ஐந்தாவது முறையாக மீண்டும் சிவகங்கை மாவட்ட செயலாளராக ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர் கேஆர்.பெரியகருப்பன் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டுள்ளார். திமுக உட்கட்சித் தேர்தல் கடந்த சில மாதங்களாக நடந்து வருகிறது. கட்சியின் கிளை அமைப்புகளில் இருந்து ஒன்றியம், பேரூர், நகரம் வாரியாக ஏற்கனவே நிர்வாகிகள் தேர்வு செய்யப்பட்டனர். இந்நிலையில் மாவட்ட செயலாளர் உள்ளிட்ட மாவட்ட நிர்வாகிகள், தலைமை செயற்குழு, பொதுக்குழு உறுப்பினர்கள் தேர்வு கடந்த சில நாட்களுக்கு முன் நடத்தப்பட்டு தற்போது அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதில் சிவகங்கை மாவட்ட செயலாளராக ஐந்தாவது முறையாக ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர் கேஆர்.பெரியகருப்பன் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டார்.