ஒட்டல் அதிபரை மிரட்டியவர்கள் மீது வழக்கு

மதுரை, செப். 29: மதுரை மாட்டுத்தாவணியைச் சேர்ந்தவர் டேனியல் தங்கராஜ்(55). இவர் மேலூர் மெயின் ரோடு உள்ளிட்ட பல்வேறு இடங்களில் ஒட்டல் நடத்தி வருகிறார். இவர் ஒத்தக்கடை இன்ஸ்பெக்டர் முருகேசனிடம் ஒரு புகார் மனு கொடுத்துள்ளார். இதில், எனது ப ண்னை தோட்டத்தில் வேலைபார்த்த சிலருடன் கூலி தொடர்பான பிரச்னை இருந்தது.

இதனை பயன்படுத்திய சிலர் அந்த தொழிலாளர்களிடம் கூடுதலாக கூலி கேட்கும் படி தூண்டி விட்டு, மேலும் என்னுடைய செல்போனுக்கும், எனது ஒட்டலுக்கு ஆட்களுடன் வந்தும் மிரட்டல் விடுத்து வருகின்றனர். இவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வே ண்டும். இவ்வாறு தெரிவித்துள்ளார். இ தனை விசாரித்த போலீசார், விசிக நிர்வாகி பாண்டியம்மாள் உள்ளிட்ட சிலர் மீது வழக்குப்பதிந்து விசாரித்து வருகின்றனர்.

Related Stories: