நெல்லை, செப். 27: பாளையில் தசரா பண்டிகை முதல் நாளான நேற்று முன்தினம் இரவு 11 கோயில்களில் இருந்து புறப்பட்ட சப்பர வீதி உலா நேற்று காலை ஒரே இடத்தில் அணி வகுத்து நின்றது. பக்தர்கள் திரண்டு வந்து அம்மனை வழிபட்டனர். மைசூர், குலசைக்கு அடுத்தபடியாக பிரம்மாண்டமாக நடைபெறும் பாளை தசரா பண்டிகை நேற்றுமுன்தினம் தொடங்கியது. பகலில் ஆயிரத்தம்மன் கோயிலில் கொடியேற்றத்தை தொடர்ந்து இரவு ஆயிரத்தம்மன், முப்பிடாதி அம்மன், முத்தாரம்மன், வடக்கு முத்தாரம்மன், வடக்கு உசக்சிமாகாளி அம்மன், விஸ்வகர்ம உச்சினிமாகாளி அம்மன், கிழக்கு உச்சினி மாகாளி அம்மன், யாதவர் தேவி உச்சினிமாகாளி அம்மன், தேவி தூத்துவாரி அம்மன், உலகம்மன், புது உலகம்மன், ஆகிய 11 கோயில்களில் இருந்து சிம்மவாகனத்தில் அம்பாள் எழுந்தருளினார்.