ஈரோடு,செப்.27: வாக்காளர் அட்டையுடன் ஆதார் எண் இணைக்கும் பணியில், 100 சதவீதம் முடித்த 25 வாக்குச்சாவடி அலுவலர்களுக்கு ஈரோடு கலெக்டர் பாராட்டி வாழ்த்துக்கள் தெரிவித்தார். ஈரோடு மாவட்டத்தில் இந்திய தேர்தல் ஆணையத்தின் உத்தரவுப்படி வாக்காளர் அடையாள அட்டையுடன் ஆதார் எண் இணைக்கும் பணி கடந்த மாதம் 1ம் தேதி முதல் துவங்கி நடைபெற்று வருகிறது. இந்த பணியினை, விரைந்து முடிக்கவும் பொதுமக்கள் எளிமையாக ஆதார் எண்ணை, வாக்காளர் அடையாள அட்டையுடன் இணைக்கும் பொருட்டு கடந்த 18ம் தேதி ஈரோடு மாவட்டத்தில் உள்ள 2,222 வாக்குச்சாவடி மையங்களில் சிறப்பு முகாம் நடைபெற்றது.