ஓசூர், ெசப்.24: ஓசூரில் ₹25 லட்சம் செலவில் சிமெண்ட் சாலை மற்றும் கழிவுநீர் கால்வாய் அமைக்கும் பணி பூமி பூஜையுடன் துவங்கியது. ஓசூர் மாநகராட்சி 26வது வார்டுக்குட்பட்ட காளேகுண்டா பகுதி சந்திரசூடேஸ்வரர் மலைக்கோயில் அடிவாரத்தில் உள்ளது. இந்த பகுதியில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இவர்கள் சாலை மற்றும் கழிவுநீர் கால்வாய் வசதியின்றி இன்றி கடும் அவதிக்குள்ளாகி வந்தனர்.