இயந்திரங்கள் பழுதால் வாக்குப்பதிவு தாமதம்

கிருஷ்ணகிரி, ஏப்.20: கிருஷ்ணகிரி நாடாளுமன்ற தேர்தலில் நேற்று காலை 3 மையங்களில் வாக்குப்பதிவு இயந்திரங்கள் பழுதால், வாக்குப்பதிவு தாமதமாக தொடங்கியது. கிருஷ்ணகிரி நாடாளுமன்ற தொகுதிக்கான பொது தேர்தல் நேற்று நடந்தது. 1888 வாக்குச்சாவடி மையங்களில் காலை 7 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கியது. அப்போது, பர்கூர் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட போச்சம்பள்ளி அனுமகவுண்டனூர் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி வாக்குச்சாவடி எண்.215, 216ல் வாக்குப்பதிவு இயந்திரத்தில் கோளாறு ஏற்பட்டது. இதை தொடர்ந்து, மாற்று இயந்திரம் கொண்டு வரப்பட்டு, 45 நிமிடங்கள் தாமதமாக வாக்குப்பதிவு தொடங்கியது. இதே போல், வெப்பாலம்பட்டி ஊராட்சி தொப்பிடிகுப்பத்தில் அமைக்கப்பட்டிருந்த வாக்குச்சாவடி ஒன்றில், இயந்திரம் பழுது காரணமாக 1 மணி நேரம் தாமதமாக வாக்குப்பதிவு தொடங்கியது.

The post இயந்திரங்கள் பழுதால் வாக்குப்பதிவு தாமதம் appeared first on Dinakaran.

Related Stories: