பேட்டராய சுவாமி கோயில் தேர்த்திருவிழா

தேன்கனிக்கோட்டை, ஏப்.20: தேன்கனிக்கோட்டை பேட்டராய சுவாமி கோயில் தேர்த்திருவிழா இன்று நடைபெறுகிறது. தேன்கனிக்கோட்டையில் உள்ள பிரசித்தி பெற்ற சௌந்தர்யவல்லி சமேத பேட்டராயசுவாமி கோயில் தேர்த்திருவிழா, ஏப்ரல் 5ம்தேதி பால் கம்ப உற்சவத்துடன் தொடங்கியது. இன்று (20ம்தேதி) காலை 10.30 மணி முதல் 11 மணி வரை தேர்த்திருவிழா நடக்கிறது. மாலை 3 மணி முதல் 6 மணி வரை தேர் கோயிலை சுற்றி கொண்டு வந்து நிலை நிறுத்தப்படுகிறது. இரவு வாணமங்கலம் குழுவினரால் கோலாட்டம் நிகழ்ச்சி நடைபெறுகிறது. 21ம்தேதி இரவு 8 மணி அளவில் ஹரிப்பிரியா, டோனி ராக் ஆர்க்கெஸ்ட்ராவின் இன்னிசை கச்சேரியும், வாண வேடிக்கையும் நடைபெறுகிறது.

The post பேட்டராய சுவாமி கோயில் தேர்த்திருவிழா appeared first on Dinakaran.

Related Stories: