நாட்டை துண்டாட நினைக்கும் சக்திகளுக்கு எதிராக வாக்களித்தேன்

ஓசூர், ஏப்.20: ஓபிஎஸ் அணியின் நிர்வாகி பெங்களூரு புகழேந்தி, நேற்று ஓசூரில் ஜான் போஸ்கோ மேல்நிலை பள்ளியில் உள்ள வாக்கு சாவடியில், தனது வாக்கை செலுத்தினார். அதனைத் தொடர்ந்து நிருபர்களிடம் அவர் கூறியதாவது: மதத்தின் பெயரால், கடவுளின் பெயரால் இந்த நாட்டை துண்டாட நினைக்கும் சக்திகளுக்கு எதிராக வாக்களித்துள்ளேன். மதச்சார்பற்ற வழியில் அரசியலில் எங்களை உருவாக்கிய தந்தை பெரியார், பேரறிஞர் அண்ணா, புரட்சித் தலைவர் எம்ஜிஆர், புரட்சித்தலைவி அம்மா போன்ற மறைந்த தலைவர்கள் எண்ணங்களை நிறைவேற்றுகின்ற வகையில், மதச்சார்பற்ற ஆட்சி தொடர வேண்டும். அதுதான் நிலைக்க வேண்டும் என்ற அடிப்படையில், எனது வாக்கு அமைந்துள்ளது. ராமநாதபுரம் நாடாளுமன்ற தேர்தல் எப்படி உள்ளது என்ற கேள்விக்கு பதிலளித்த புகழேந்தி, ராமநாதபுரத்தை பொறுத்தவரை எனது சொந்த கருத்தாக ஓபிஎஸ் பலாப்பழம் சின்னத்தில் மாபெரும் வெற்றியை பெறுவார் என்றார்.

The post நாட்டை துண்டாட நினைக்கும் சக்திகளுக்கு எதிராக வாக்களித்தேன் appeared first on Dinakaran.

Related Stories: