மரக்கன்று நடும் விழா

தேன்கனிக்கோட்டை, ஏப்.23: தேன்கனிக்கோட்டை அருகே, கெலமங்கலம் வட்டாரம் உனிசெட்டி ஆரம்ப சுகாதார நிலையத்தில், உலக புவி தினத்தை முன்னிட்டு 100 மரகன்றுகள் நடும் விழா நடைபெற்றது. கெலமங்கலம் வட்டார மருத்துவ அலுவலர் ராஜேஷ்குமார் தலைமையில், மருத்துவர்கள் சபரிநாதன், கார்த்திக், சரவணன், செவிலியர்கள், சுகாதார ஆய்வாளர்கள், மருத்துவ பணியாளர்கள், ஊராட்சி செயலாளர், கிராம மக்கள் கலந்து கொண்டு மருத்துவமனை வளாகத்தில் மரக்கன்றுகளை நட்டனர். தற்ேபாது நிலவி வரும் வெயில், மழையின்ைம ஆகியவற்ைற கருத்தில் கொண்டு மாணவ, மாணவிகள் மற்றும் சுற்றுச்சூழலில் ஆர்வம் கொண்ட அனைவரும், மரக்கன்றுகள் வளர்த்து மழை வளத்தை பெறலாம் என விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.

The post மரக்கன்று நடும் விழா appeared first on Dinakaran.

Related Stories: