கமுதி, செப்.24: கமுதியில் பள்ளிக்குள் 7 அடி நீள கருநாகம் புகுந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. கமுதியில் தனியார் பெண்கள் மேல்நிலைப் பள்ளி உள்ளது.
இங்குள்ள விளையாட்டு திடலுக்கு நேற்று மாலை 7 அடி நீள கருநாகம் வந்தது. இதை பார்த்த மாணவிகள் அலறியடித்து ஓடினர். பின்னர் பாம்பு பழைய பொருட்கள் போட்டு இருக்கும் இடத்தின் அருகே குழிக்குள் சென்றது. இதனையடுத்து கமுதி தீயணைப்புத் துறையினருக்கு பள்ளி நிர்வாகம் சார்பில் தகவல் கொடுக்கப்பட்டது.