சாயல்குடி, செப்.24: திருஉத்தரகோசமங்கை மற்றும் சாயல்குடி பகுதியிலுள்ள சிவன் கோயில்களில் பிரதோஷ வழிபாடு நேற்று மாலையில் நடந்தது. புரட்டாசி மஹாளய மாத சிறப்பு பிரதோஷத்தை முன்னிட்டு திருஉத்தரகோசமங்கை மங்களேஸ்வரி உடனுரை மங்களநாதர் கோயிலுள்ள நந்தியம்பெருமானாருக்கு மஞ்சள், பால், விபூதி, சந்தனம், பஞ்சாமிர்தம் உள்ளிட்ட பல்வேறு பொருட்களால் சிறப்பு அபிஷேகம் மற்றும் பூஜைகள் நடந்தது. பிறகு உலக நன்மைக்காக வில்வம் இலை, தாழம்பூ சாற்றி சிறப்பு அர்ச்சனை நடந்தது. சாயல்குடி அருகே மாரியூர் பவளநிற வள்ளியம்மன் உடனுரை பூவேந்தியநாதர், ஆப்பனூர் குழாலாம்பிகை உடனுரை திருஆப்பநாதர், சாயல்குடி மீனாட்சியம்மன் உடனுரை கைலாசநாதர்,