விளாத்திகுளம், செப். 22: தூத்துக்குடியில் இன்று(22ம் தேதி) அறிவியல் இயக்கம் சார்பில் புதிய கல்விக்கொள்கை பற்றிய கருத்து கேட்பு கூட்டம் நடக்கிறது. இதுகுறித்து தமிழ்நாடு அறிவியல் இயக்க மாவட்ட செயலாளர் மற்றும் ஒருங்கிணைப்பாளர் சுரேஷ்பாண்டி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: ஒன்றிய அரசின் தேசிய கல்விக் கொள்கை குறித்த கருத்து கேட்பு கூட்டம், தமிழகம் முழுவதும் நடைபெற்று வருகிறது. தமிழக அரசின் இந்நடவடிக்கைக்கு வலுசேர்க்கும் விதமாகவும், கல்வித்துறையில் சீரிய முறையில் பங்காற்றி வரும் தமிழ்நாடு அறிவியல் இயக்க தூத்துக்குடி மாவட்ட குழு சார்பில் புதிய கல்விக் கொள்கை கருத்து கேட்பு கூட்டம், இன்று மாலை 5 மணிக்கு தூத்துக்குடி மில்லர்புரம் புனித மரியன்னை ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் நடைபெற உள்ளது.