கந்தர்வகோட்டை அருகே மட்டாங்கால் ஊராட்சியில் சேதமான அங்கன்வாடியை சீரமைக்க வேண்டும்

கந்தர்வகோட்டை, செப்.22: புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வகோட்டை ஊராட்சி ஒன்றியம் மட்டாங்கால் ஊராட்சியில் உள்ள தமிழ்நாடு ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி பணி துறை சார்பில் செயல்படும் மட்டாங்கால் மைய எண் ஒன்று கட்டிடம் மிகவும் பழுதடைந்து குழந்தைகளுக்கு பெரும் ஆபத்து ஏற்படும் விதமாக உள்ளது. இதனை வடகிழக்கு பருவ மழைக்கு முன்பாக சரி செய்து குழந்தைகளையும், அங்கன்வாடி பணியாளர்களையும்,

சமையலர்களையும் பெரும் ஆபத்தில் இருந்து காக்க வேண்டும் என சம்பந்தப்பட்ட துறைக்கு மட்டாங்கால் பொதுமக்களும், அங்கன்வாடியில் பயிலும் குழந்தைகளின் பெற்றோர்களும் கோரிக்கை விடுத்துள்ளனர். இந்த மையத்தில் 25 குழந்தைகள் கல்வி பயின்று வருகின்றனர். மேலும் காலிப்பணியிடமாக உள்ள சமையலர் பணியிடத்தினை உடனடியாக நிரப்ப வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.

Related Stories: