முசிறி, செப். 20: முசிறி நகராட்சி அலுவலகத்தில் இறைச்சி கடை உரிமையாளர்களுடன் சுகாதாரம் குறித்த ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு நகராட்சி ஆணையர் மனோகரன் தலைமை வகித்தார். நகர செயலாளர் சிவகுமார், வார்டு உறுப்பினர் முகேஷ் உள்ளிட்ட பலர் முன்னிலை வகித்தனர். ஆணையர் மனோகரன் பேசும்போது முசிறி நகராட்சியில் சுமார் 40 இறைச்சி கடைகள் உள்ளன. இறைச்சி கழிவுகளை பொது இடங்களில் கொட்டுவதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. மீறி கொட்டுபவர்கள் மீது உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்படும். மேலும் இறைச்சி கழிவுகளை உரமாக்கும் தனியார் அமைப்பு முசிறியில் செயல்படும் மீன், கோழி, மட்டன், பீப் இறைச்சி கடைகளில் வீணாகும் இறைச்சிக் கழிவுகளை தினசரி நேரில் வந்து கடைகளில் பெற்று கொள்ள உள்ளனர்.