தஞ்சாவூர், செப்.20: கணவருக்கு மாற்றுத் திறனாளிக்கான உதவி தொகை வழங்க கோரி தஞ்சாவூர் கலெக்டரிடம் பெண் கோரிக்கை மனு அளித்தார். தஞ்சாவூர் மாவட்டம் திருவையாறு தாலுக்கா ஆதிதிராவிடர் தெரு அந்தணக்குறிச்சி பகுதியை சேர்ந்த ராதாகிருஷ்ணன்.மாற்றுத்திறனாளி. இவரது மனைவி உஷா. இவர்களுக்கு 2 குழந்தைகள் உள்ளனர்.மாற்றுத்திறனாளி ராதாகிருஷ்ணன் எந்த வேலையும் செய்யமுடியாத நிலையில் உள்ளார். இந்த நிலையில் தஞ்சாவூர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் நடந்த மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் கலெக்டர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவரிடம், உஷா ஒரு கோரிக்கை மனு அளித்தார். அந்த மனுவில் கூறியிருப்பதாவது: எனது கணவர் மாற்றுத்திறனாளி. அவரால் எந்த வேலையும் செய்ய முடியாது.