இலவச வீட்டுமனை பட்டா கோரி கோவில்பட்டி கோட்டாட்சியர் ஆபீசை சமகவினர் முற்றுகை

கோவில்பட்டி, செப். 13: இலவச வீட்டுமனை பட்டா கோரி கோவில்பட்டி கோட்டாட்சியர் அலுவலகத்தை சமகவினர் முற்றுகையிட்டுப் போராட்டம் நடத்தினர். வீடு இல்லாதவர்களுக்கு இலவச வீட்டுமனை பட்டா வழங்க வலியுறுத்தி தூத்துக்குடி வடக்கு மாவட்ட சமக சார்பில்  கோவில்பட்டி கோட்டாட்சியர் அலுவலகத்தை முற்றுகையிடும் போராட்டம் மாவட்டச் செயலாளர் பாஸ்கரன் தலைமையில் நடந்தது. இதில் லிங்கம்பட்டி சமத்துவபுரம் ஒன்றியச் செயலாளர் சின்னத்தம்பி முன்னிலை வகித்தார். லிங்கம்பட்டி கிளைச் செயலாளர் தங்கராஜ், கடலையூர் கிளைச் செயலாளர் முத்துகிருஷ்ணன், கோவில்பட்டி நகரச் செயலாளர் அய்யாத்துரைபாண்டியன், ஒன்றிய மாணவரணி துணைச் செயலாளர் தங்கமுத்து, கிளை துணைச்செயலாளர்கள் லாசர், முத்து கனி, கிளை பொருளாளர் முருகன் உள்ளிட்ட நிர்வாகிகள் மற்றும் பட்டா கேட்டு விண்ணப்பித்த பொது மக்கள் பங்கேற்றனர். தொடர்ந்து கட்சி நிர்வாகிகளும், பொதுமக்களும் கோட்டாட்சியர் அலுவலகதத்தில் மனு அளித்தனர்.

Related Stories: