சீனிவாச பெருமாள் கோயில் கும்பாபிஷேகம்

பண்ருட்டி, செப். 9: பண்ருட்டி அருகே பண்டரக்கோட்டை கிராமத்தில் சீனிவாச பெருமாள் கோயில் புதியதாக திருப்பணிகள் செய்து கணபதி ஹோமத்துடன் பூஜை துவங்கியது. மூன்று கால யாகசாலை பூஜைகள் செய்யப்பட்டது. தொடர்ந்து கடம் புறப்பாடு நடந்து கோயில் கலசங்களுக்கு புனிதநீர் ஊற்றி கும்பாஷேகம் செய்யப்பட்டது. பல்வேறு கிராமத்திலிருந்து ஏராளமான பெருமாள் பக்தர்கள் வந்து தரிசனம் செய்து கும்பாஷேகத்தை கண்டு களித்தனர். பக்தர்களுக்கு அன்னதானம் அளிக்கப்பட்டது. நிகழ்ச்சி ஏற்பாடுகளை கோயில் நிர்வாகிகள் செய்திருந்தனர். இதேபோல் தொரப்பாடி, கண்டரக்கோட்டை உள்ளிட்ட பல்வேறு கிராமங்களில், விநாயகர், மாரியம்மன் கோயில் மகா கும்பாபிஷேகம் நடந்தது.

Related Stories: