தொட்டியம் அருகே மைனர் பெண்ணை மணமுடித்தவர் கைது

முசிறி, செப்.6: தொட்டியம் அருகே மைனர் பெண்ணை திருமணம் செய்த வாலிபரை போலீசார் கைது செய்தனர். தொட்டியம் அருகே உள்ள கீழகார்த்திகை பட்டியை சேர்ந்தவர் கார்த்திக் (24). இவர் மைனர் பெண் ஒருவரை வீட்டிற்கு அழைத்து சென்று தாலி கட்டி பலாத்காரம் செய்ததாக தெரிகிறது. இதுகுறித்து முசிறி அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் சிறுமியின் தாய் புகார் செய்தார். போலீசார் கார்த்திக் என்பவரை கைது செய்து விசாரணை செய்து வருகின்றனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Related Stories: