நாகப்பட்டினம், செப். 3: வேளாங்கண்ணி ஆரோக்கிய அன்னை ஆண்டுபெருவிழாவை முன்னிட்டு சிலுவை பாதை புனித பயணம் நடந்தது. இதில் ஏராளமான கிறிஸ்தவர்கள் கலந்து கொண்டு தங்களது வேண்டுதல்களை ஆரோக்கிய அன்னையிடம் தெரிவித்தனர். வேளாங்கண்ணி ஆரோக்கிய அன்னை ஆண்டு பெருவிழா கடந்த 29ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. வரும் 8ம் தேதி அன்னையின் பிறந்த நாள் விழா தஞ்சாவூர் மறைமாவட்ட ஆயர் தேவதாஸ் அம்புரோஸ் தலைமையில் நடைபெறுகிறது. இதை முன்னிட்டு வரும் 7ம் தேதி இரவு பெரிய தேர்பவனி நடைபெறுகிறது. விழா நடைபெறும் நாட்களில் தினந்தோறும் தமிழ், ஆங்கிலம், மராத்தி, கொங்கனி என பல்வேறு மொழிகளில் திருப்பலி நடந்து வருகிறது. இந்நிலையில் நேற்று வேளாங்கண்ணியில் சிலுவைபாதை புனித பயணத்தை கிறிஸ்தவர்கள் மேற்கொண்டனர். கொங்கனி மொழி, தமிழ்மொழி, ஆங்கில மொழி, மராத்திய மொழிகளில் சிலுவை பாதை நடந்தது. இதில் ஏராளமான கிறிஸ்தவர்கள் கலந்து கொண்டு தங்களது வேண்டுதல்களை ஆரோக்கிய அன்னையிடம் தெரிவித்தனர்.