மேலப்பிடாவூர் கருப்பணசுவாமி கோயில் கும்பாபிஷேகம் திரளான பக்தர்கள் பங்கேற்பு

மானாமதுரை, செப். 3: மானாமதுரை அருகே மேலப்பிடாவூர் கிராமத்தில் உள்ள கருப்பணசுவாமி மற்றும் பரிவார தெய்வங்களுக்கு கும்பாபிஷேகம் நடந்தது. மானாமதுரை அருகே மேலப்பிடாவூர் கிராமத்தில் கருப்பணசுவாமி, மதுரைவீரன்சுவாமி, ராக்கச்சியம்மன், காளியம்மன், பள்ளிமறத்தியம்மன் உள்ளிட்ட ேகாயில்கள் உள்ளது. இங்குள்ள பரிவார தெய்வங்களுக்கு கும்பாபிஷேகம் செய்வது என கிராமத்தினர் முடிவு செய்தனர். அதன்படி திருப்பணி வேலைகள் நடந்து வந்தன. நேற்று முன்தினம் யாகசாலை பூஜைகள் துவங்கியது. நேற்று காலை 9 மணிக்கு மேல் 2ம் கால யாகபூஜைக்கு பின் கோபூஜை, பூர்ணாகுதி, கடம்புறப்பாடாகி சிவகங்கை காசிவிஸ்வநாதர் கோயில் சிவாச்சாரியர் சந்திரசேகரசிவாச்சாரியர் தலைமையில் புனித நீர் ஊற்றப்பட்டது. அதன்பின் கருப்பணசுவாமி, மதுரை வீரசுவாமி உள்ளிட்ட தெய்வங்களுக்கும் சிறப்பு அபிஷேகம் நடந்தது. விழாவில் கலந்துகொண்ட பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது. ஏற்பாடுகளை விழாக்கமிட்டியினரும், பொதுமக்களும் செய்திருந்தனர்.

Related Stories: