திருவள்ளூர்: ஓசூரை சேர்ந்தவர் ராமச்சந்திரன். இவருக்கு சொந்தமான நிலம் பூந்தமல்லி அடுத்த ஆண்டர்சன்பேட்டையில் உள்ளது. அவருக்கு சொந்தமான இடத்தில் காம்பவுண்ட் சுவர் அமைக்கும் போது புரட்சி பாரதம் கட்சியின் கட்சியின் கொடி கம்பம் அமைத்து இருப்பதாகவும், அந்தக் கொடி கம்பத்தை அகற்றி தர வேண்டும் என உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இந்த மனுவை விசாரித்த நீதிபதி மூன்று வார காலத்திற்குள் கொடி கம்பத்தை அகற்ற வேண்டும் என உத்தரவிட்டார். இதனையடுத்து நேற்று பூந்தமல்லி தாசில்தார் செல்வம், பூந்தமல்லி உதவி கமிஷனர் முத்துவேல் பாண்டியன், இன்ஸ்பெக்டர்கள் ரவிக்குமார், வெற்றிச்செல்வி ஆகியோர் தலைமையில் போலீசார் அங்கு குவிக்கப்பட்டிருந்தனர்.