நாமகிரிப்பேட்டை, ஆக.10: நாமகிரிப்பேட்டை வட்டார வேளாண்மை உழவர் நலத்துறை மூலம், அட்மா திட்டத்தின் கீழ், கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண்மை வளர்ச்சி திட்டம் செயல்படுத்தப்படும் கிராம பஞ்சாயத்துகளுக்கு முன்னுரிமை அடிப்படையில், விவசாயிகளுக்கு பல்வேறு பயிற்சிகள் நடத்தப்பட்டு வருகிறது. அதன்படி மங்களபுரம் வருவாய் கிராமத்தில் கால்நடை பராமரிப்புத்துறை மருத்துவர்களை கொண்டு, விவசாயிகளுக்கு பால் மற்றும் பாலில் உப பொருட்கள் தயார் செய்தல் என்ற தலைப்பில் பயிற்சி வழங்கப்பட்டது. கால்நடை உதவி மருத்துவர் ஜெயசத்யா கலந்துகொண்டு பால் மற்றும் பாலில் உப பொருட்கள் தயார் செய்வது குறித்து விளக்கமளித்தார்.