கும்பகோணம், ஆக.10:கும்பகோணம் ஆதிகும்பேஸ்வரர் சுவாமி கோயில் திருமஞ்சன வீதியில் விளையாட்டு முத்து மாரியம்மன் கோவில் உள்ளது. இந்த கோவிலில் 34வது ஆண்டாக நேற்று ஆடி மாத கரக உற்சவம் நடைபெற்றது. இதையொட்டி கடந்த 2ம் தேதி கணபதி ஹோமம், லட்சுமி ஹோமம், மூல மந்திர ஹோமம் மற்றும் காப்பு கட்டுதலுடன் விழா தொடங்கியது. தொடர்ந்து விழா நாட்களில் தினமும் மாலை சிறப்பு அலங்காரத்தில் அம்பாளுக்கு சிறப்பு தீபாராதனை நடைபெற்றது. இதனைத்தொடர்ந்து முக்கிய நிகழ்ச்சியாக நேற்று திருமஞ்சன வீதி காவேரி ஆற்றங்கரையிலிருந்து சக்திகரகம், வேல் தீச்சட்டி, பால்குடம், அலகு காவடியுடன் திரளான பக்தர்கள் புறப்பட்டு, மாநகரின் முக்கிய வீதிகளின் வழியாக ஊர்வலமாக வந்து கோயிலை அடைந்தனர்.