குடிபோதையில் ரகளை 4 பேர் கைது

தேவதானப்பட்டி, ஆக. 8: தேவதானப்பட்டி அருகே உள்ள மேல்மங்கலம் இளந்தோப்பு பகுதியைச் சேர்ந்த பணப்பாண்டி மகன் ரஞ்சித்குமார் (26). இவர், நால்ரோடு பிரிவு அருகே உள்ள ஓட்டலில் சாப்பிட சென்றார். அப்போது அங்கு குடிபோதையிலிருந்த மேலத்தெருவைச் சேர்ந்த கழுவாண்டி மகன்கள் நந்தா மற்றும் மாயி ஆகியோர், ரஞ்சித்குமாரை அவதூறாக பேசி கட்டையால் அடித்து ரத்தகாயம் ஏற்படுத்தினர். இதில், பலத்த காயமடைந்த ரஞ்சித்குமார் தேனி க.விலக்கு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். இது குறித்து புகாரின் பேரில், ஜெயமங்கலம் போலீசார் வழக்கு பதிவு செய்து நந்தா மற்றும் மாயி ஆகியோரை கைது செய்து விசாரித்து வருகின்றனர். இதே பிரச்னையில் ரஞ்சித்குமாரின் தந்தை பணப்பாண்டி, கழுவாண்டி மனைவி மணம் (42) என்பவரை அவதூறாக பேசி கொலை மிரட்டல் விடுத்துள்ளார். இது குறித்து புகாரின் பேரில், போலீசார் பணப்பாண்டி மற்றும் பொன்முத்து ஆகியோரை கைது செய்து விசாரித்து வருகின்றனர்.

Related Stories: