திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலுக்கு திருவிழா காலங்களில் மதுரை, அருப்புக்கோட்டை, ராமநாதபுரம் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் இருந்து பக்தர்கள் பாதயாத்திரையாக செல்கின்றனர். அந்த பக்தர்கள் வசதிக்காக தூத்துக்குடி உப்பாற்று ஓடை அருகே உள்ள 2.5 ஏக்கர் நிலத்தில் கழிப்பறை, பூங்கா உள்ளிட்ட அனைத்து வசதிகளுடன் கூடிய ஓய்வு கூடம் அமைக்க திட்டமிடப்பட்டுள்ளதாக மேயர் ஜெகன் பெரியசாமி தெரிவித்தார்.