தேனி, ஜூலை 30: நீர்நிலைகளில் மூழ்குவோரை காப்பாற்றுதல், மின்சார விபத்துக்களில் சிக்குவோரை காப்பாற்றுதல், தீவிபத்துக்கள்,நிலச்சரிவு, விலங்கினங்களால் தாக்குதல், சுரங்கமீட்பு நடவடிக்கைகள் போன்ற விபத்துக்கள் ஏற்படும் போது, விபத்தில் சிக்குவோரை காப்பாற்றுவோருக்கு இந்திய ஒன்றிய அரசு பல்வேறு விருதுகளை வழங்கி கவுரவித்து வருகிறது. இதன்படி, மிகவும் அபாயகரமான நிலையில் உள்ளவரை வீரத்துடன் போராடி, மீட்பவர்களக்கு சர்வோத்தம் ஜீவன் ரக்ஷா விருதும், துணிச்சலுடன் தாமதமின்றி செயல்பட்டு மிகவும் அபாயகரமான நிலையில் உள்ளவரை போராடி மீட்பவருக்கு உத்தம் ஜீவன் ரக்ஷா விருதும்,