ராமநாதபுரம், ஜூலை 30: ராமநாதபுரத்தில் 2 கடைகளின் பூட்டை உடைத்து ரூ.ஒரு லட்சம் திருடிய மர்ம நபர்களை போலீசார் தேடி வருகின்றனர். ராமநாதபுரம் அரசு மருத்துவக் கல்லூரி ரோடு பகுதியில் வட மாநிலத்தை சேர்ந்த ஒருவர் பேன்ஸி பொருட்கள் மொத்த வியாபாரம் செய்து வருகிறார். நேற்று முன்தினம் இரவு வியாபாரம் முடித்து பூட்டிய கடையை வேலையாட்கள் நேற்று காலை திறக்க வந்தனர். அப்போது கடையின் ஷட்டரின் பூட்டு உடைக்கப்பட்டு கிடந்தது. உள்ளே சென்று பார்த்த போது அங்கு பணப்பெட்டியில் வைத்திருந்த ரூ.80 ஆயிரம் ரொக்கம் திருடு போனது தெரிந்தது.