திண்டுக்கல், ஜூலை 30: திண்டுக்கல்லை அடுத்த நந்தவனப்பட்டியில் தங்கியிருந்த தேவேந்திர குல வேளாளர் கூட்டமைப்பு நிறுவன தலைவர் பசுபதி பாண்டியன் கடந்த 2012 ஜனவரியில் படுகொலை செய்யப்பட்டார். இது தொடர்பாக தூத்துக்குடி மாவட்டம், மூலக்கரையைச் சேர்ந்த சுபாஷ் பண்ணையார் உள்பட 18 பேர் மீது தாடிக்கொம்பு போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். இந்த வழக்கில் தொடர்புடைய முத்துப்பாண்டியன், நிர்மலா, ஆறுமுகசாமி, புறா மாடசாமி, பாட்சா என்ற மாடசாமி ஆகிய 5 பேர் கொலை செய்யப்பட்டனர்.