திருப்பூர், ஜூலை 30: ஊத்துக்குளி அருகே அம்மன் கோயிலில் நடந்த கொள்ளை முயற்சி சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.திருப்பூர், ஊத்துக்குளி அருகே செங்கப்பள்ளியில் அழகு நாச்சியம்மன் கோயில் உள்ளது. இந்த கோயில் இந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ளது. இந்நிலையில், நேற்று முன்தினம் இரவு கோயிலில் பூஜைகளை முடித்து விட்டு வழக்கம்போல கோயிலை ஊழியர்கள் பூட்டி சென்றனர்.