ஆவடி: புறநகர் மின்சார ரயில்களில் செல்போன் திருடிய 2 பேரை போலீசார் கைது செய்தனர். சென்னை சென்ட்ரலில் இருந்து திருவள்ளூர் செல்லும் மின்சார ரயில்களில் தினமும் ஏராளமான பயணிகள் சென்று வருகின்றனர். இதில் காலை, மாலை வேளைகளில் கூட்டம் அதிகமாக இருக்கும். இத்தகைய சந்தர்ப்பங்களை பயன்படுத்தி, ரயில் பயணிகளிடம் செல்போன் பறிக்கும் சம்பவம் நடந்து வருகிறது. இதேபோல் ஆவடி, பட்டாபிராம் செல்லும் மின்சார ரயில்களில் கடந்த சில நாட்களுக்கு முன் ஆவடி பகுதியை சேர்ந்த பாலாஜி, ஆன்டோமரியா, விக்னேஷ் ஆகிய 3 பேரின் விலை உயர்ந்த செல்போன்களை மர்ம கும்பல் பறித்தது. புகாரின்பேரில் ஆவடி ரயில்வே போலீசார் வழக்குப்பதிவு செய்து, மர்ம கும்பலை வலைவீசி தேடி வந்தனர்.