நிலமோசடி செய்த தம்பதி மீது வழக்கு

விருதுநகர், ஜூன் 25: நிலமோசடி செய்தது தொடர்பாக தம்பதி மீது குற்றப்பிரிவு போலீசார் வழக்குப்பதிந்துள்ளனர். விருதுநகர் மாவட்டம், சிவகாசியை சேர்ந்தவர் சாத்தூரப்பன். இவருக்கு மகன் சாத்தூரப்பன், மகள் ரேவதி (45) உள்ளனர். இதில், தந்தை சாத்தூரப்பனின் பெயரில் சித்துராஜபுரம் பகுதியில் நிலங்கள் இருந்தன. கடந்த 2007ல் சாத்தூரப்பன் இறந்தார். இந்நிலையில், பெயர் ஒற்றுமையை பயன்படுத்து மகன் சாத்தூரப்பன், தந்தையின் பெயரில் இருந்த நிலங்களை தனது மனைவி பெயருக்கு தானசெட்டில்மென்ட் மூலம் பத்திரப்பதிவு செய்தார். இது தொடர்பாக மாவட்ட குற்றப்பிரிவில் ரேவதி அளித்த புகாரின்பேரில் போலீசார் சாத்தூரப்பன், அவரது மனைவி ஆகியோர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

Related Stories: