ஸ்ரீவைகுண்டம், ஜூன் 25: ஸ்ரீவைகுண்டத்தில் அகில இந்திய பார்வர்டு பிளாக் கட்சியின் 84வது துவக்க தினவிழா நடைபெற்றது. மாநில இளைஞரணி தலைவர் ஸ்ரீவை. சுரேஷ் தலைமை வகித்தார். மாவட்ட செயலாளர் முத்துராமலிங்கம், மாநில மாணவரணி செயலாளர் கொம்பையா பாண்டியன், நிர்வாகிகள் சில்வர் பாண்டியன், ராமசாமி முன்னிலை வகித்தனர். இதில் மூத்த நிர்வாகிகளான மருதுபாண்டியன், முத்துப்பாண்டியன் ஆகியோர் கவுரவிக்கப்பட்டனர். தொடர்ந்து ஸ்ரீவைகுண்டம் சிவன் கோயில் அருகிலுள்ள அன்னை சத்யா அம்மையார் ஆதரவற்றோர் காப்பகத்தில் தங்கி படிக்கும் மாணவிகளுக்கு மதிய உணவு வழங்கப்பட்டது.