திருத்தணி முருகன் கோயிலில் ஒரேநாளில் 37 ஜோடிகளுக்கு திருமணம்

திருத்தணி: திருத்தணி முருகன் கோயிலில் நேற்று ஒரேநாளில் 37 ஜோடிகளுக்கு திருமணம் நடந்தது. திருத்தணி நகரத்தில் 100க்கும் மேற்பட்ட தனியார் திருமண மண்டபங்கள் உள்ளன. இந்நிலையில், நேற்று திருமண முகூர்த்தநாள் என்பதால் திருத்தணி முருகன் மலைக்கோயிலில் 37 ஜோடிகளுக்கு திருமணம் நடந்தது. இதுதவிர நகரத்தில் உள்ள 68 திருமண மண்டங்களிலும் திருமணம் நடந்தது. இந்த திருமணத்திற்கு வந்த உறவினர்கள் மற்றும் மணமக்கள் என ஆயிரக்கணக்கான பக்தர்கள் மலைக்கோயிலில் குவிந்தனர். இதனால், வழியில் பக்தர்கள் இரண்டு மணிநேரம் நீண்ட வரிசையில் காத்திருந்து மூலவரை தரிசித்தனர். இதனால் கோயிலில் திரும்பிய பக்கமெல்லாம் திருமண கோஷ்டியினராகவே இருந்தனர். சிறப்பு தரிசன கட்டண வரிசையில் திருமண ஜோடிகள், பக்தர்கள் வரிசையில் காத்திருந்து  முருகப்பெருமானை  வழிப்பட்டனர்.

Related Stories: