ஊத்தங்கரை அருகே தண்டவாளத்தில்

வாலிபர் சடலம் மீட்புஊத்தங்கரை, ஜூன் 6: ஊத்தங்கரை அடுத்த கீழ்எட்டிப்பட்டி பகுதியில் உள்ள தண்டவாளத்தில், நேற்று முன்தினம் சுமார் 30 வயது மதிக்கதக்க வாலிபர் சடலம் கிடப்பதாக, ரயில்வே போலீசார் மற்றும் சாமல்பட்டி போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதன்பேரில் சேலம் ரயில்வே போலீசார் விரைந்து வந்து, சடலத்தை கைப்பற்றி சேலம் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இதுபற்றி வழக்குப்பதிவு செய்து சடலமாக கிடந்தவர் யார்?, தண்டவாளத்தை கடந்த போது ரயிலில் அடிபட்டு இறந்தாரா? அல்லது ரயில் முன் பாய்ந்து தற்கொலை செய்து கொண்டாரா? என்ற கோணங்களில் விசாரித்து வருகின்றனர்.

Related Stories: