வையம்பட்டியில் அனுமதியின்றி கிராவல் மண் ஏற்றிய 2 வாகனம் பறிமுதல்

துவரங்குறிச்சி, மே 30: திருச்சி மாவட்டம் மணப்பாறை அடுத்த வையம்பட்டி அருகே அனுமதியின்றி கிராவல் மண் ஏற்றிய ஜேசிபி, டிராக்டர் பறிமுதல் செய்யப்பட்டது. மணப்பாறை அடுத்த வையம்பட்டி ஒன்றியம் கே.புதுக்கோட்டை பஞ்சாயத்து கரையாம்பட்டி கிராமத்தில் உண்டிவீரன் கோயிலுக்கு சொந்தமான இடத்தில் கிராவல் மண் எடுப்பதாக வையம்பட்டி போலீசாருக்கு தகவல் கிடைத்தது. தகவலின்பேரில் சம்பவ இடத்திற்கு எஸ்ஐ நல்லதம்பி தலைமையிலான போலீசார் அங்கு சென்று அரசு அனுமதியின்றி கிராவல் மண் அள்ளிக் கொண்டிருந்த புதிய ஜேசிபி வாகனம் மற்றும் இரு டிராக்டர்கள் (டிப்பருடன்) ஆகியவற்றை பறிமுதல் செய்தனர். மேலும் வாகன உரிமையாளர்கள் குறித்து விசாரித்து வருகின்றனர்.

Related Stories: