திருப்பூர்,மே27: சைமா சங்கம் மற்றும் பவர் டேபிள் சங்கங்கள் இடையே கூலி உயர்வு தொடர்பான பேச்சுவார்த்தை நடந்து வருகிறது. 8 கட்டமாக இருதரப்பினரும் தொடர்ந்து பேச்சுவார்த்தையில் ஈடுபட்டும், இதுவரை உடன்பாடு ஏற்படவில்லை. இந்நிலையில் பவர் டேபிள் உரிமையாளர்கள் சங்க நிர்வாக குழு கூட்டம் நேற்று திருப்பூரில் நடந்தது. இதில் கூலி உயர்வு பேச்சுவார்த்தையில் தொடர்ந்து இழுபறி நீடித்து வருவதால், அடுத்து மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் குறித்து ஆலோசனை செய்யப்பட்டது.
இந்த கூட்டத்திற்கு சங்க தலைவர் நந்தகோபால் தலைமை தாங்கினார். துணைத்தலைவர் நாகராஜ், செயலாளர் முருகேசன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில் துணைச்செயலாளர் பொன்சங்கர் மற்றும் பொருளாளர் சுந்தரம் உள்பட பலர் கலந்துகொண்டனர்.