நாளை திமுக மாநகர, ஒன்றிய, நகர பேரூர் செயலாளர்கள் ஆலோசனை கூட்டம்: அமைச்சர் சா.மு.நாசர் வேண்டுகோள்

திருவள்ளூர்: திருவள்ளூர் மத்திய மாவட்ட திமுக பொறுப்பாளரும், பால்வளத் துறை அமைச்சருமான அமைச்சர் ஆவடி சா.மு.நாசர் வெளியிட்டுள்ள அறிக்கை:  திருவள்ளூர் மத்திய மாவட்ட திமுக மாநகர, ஒன்றிய, நகர, பேரூர் செயலாளர்கள், மாவட்ட அமைப்பாளர்கள், துணை அமைப்பாளர்கள் ஆலோசனைக் கூட்டம் நாளை 27ம் தேதி காலை 10 மணி அளவில் திருவள்ளூர் அடுத்த காக்களூர் பைபாஸ் சாலையில் உள்ள ஆர்.எம்.கெஸ்ட் ஹவுஸில் எனது தலைமையில் நடக்கிறது. கூட்டத்திற்கு பூந்தமல்லி தொகுதி எம்எல்ஏ ஆ.கிருஷ்ணசாமி, மாநில, மாவட்ட நிர்வாகிகள் சி.ஜெரால்டு, கே.ஜெ.ரமேஷ், காயத்திரி ஸ்ரீதரன், மா.ராஜி, எஸ்.ஜெயபாலன், தொழுவூர் பா.நரேஷ்குமார், காக்களூர் த.எத்திராஜ், வி.ஜெ.சீனிவாசன், வி.சிங்காரம், ஆர்.எஸ்.ராஜராஜன், கு.சேகர், எல்லாபுரம் எம்.குமார், பொன் ஜி.விமல்வர்ஷன், ஜெ.மகாதேவன் ஆகியோர் முன்னிலை வகிக்கின்றனர். ஒன்றிய செயலாளர் ஆர்.ஜெயசீலன் வரவேற்கிறார்.

இந்த கூட்டத்தில் முன்னாள் முதல்வர் முத்தமிழறிஞர் டாக்டர் கலைஞரின் பிறந்த நாள் விழாவை சிறப்பாக கொண்டாடுவது குறித்தும் வருகின்ற 28 ம் தேதி சென்னையில் முத்தமிழ் அறிஞர் டாக்டர் கலைஞரின் சிலை திறப்பு விழா குறித்தும் ஆலோசிக்க பட உள்ளது. எனவே மாநகர, ஒன்றிய, நகர, பேரூர் செயலாளர்கள், மாவட்ட அணிகளின் அமைப்பாளர்கள், துணை அமைப்பாளர்கள், உள்ளாட்சி மன்ற பிரதிநிதிகள் அனைவரும் கலந்து கொண்டு சிறப்பிக்குமாறு கேட்டுக்கொள்கிறேன். இவ்வாறு அமைச்சர் ஆவடி சா.மு.நாசர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

Related Stories: