குண்டர் சட்டத்தில் வாலிபர் கைது

மதுரை, மே 25: மதுரை திருப்பரங்குன்றம் கோட்டை தெருவை சேர்ந்தவர் ராம்குமார்(22). இவர், மதுரை நகரில் காயம் ஏற்படுத்துதல் மற்றும் வழிப்பறி வழக்குகளில் பொது கண்காணிப்பிற்கு உட்படுத்தப்பட்டிருந்தார். இவரது இத்தகைய சட்ட விரோத செயல்களை கட்டுப்படுத்தும் விதமாக, இவரை குண்டர் சட்டத்தின் கீழ் கைது செய்ய, மதுரை மாநகர போலீஸ் கமிஷனர் செந்தில்குமார் உத்தரவிட்டார். இதன்பேரில், ராம்குமாரை போலீசார் குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் கைது செய்து, மதுரை மத்திய சிறையில் அடைத்தனர்.

Related Stories: