கார் கவிழ்ந்து குழந்தை உள்பட 2 பேர் பலி

மூணாறு, மே 20: கேரள மாநிலம், மூணாறை சுற்றிப்பார்க்க, ஆந்திராவிலிருந்து 3 கார்களில் 25 பேர் வந்தனர். இவர்கள், நேற்று காலை 7.30 மணியளவில் சின்னக்கானலிலிருந்து மூணாறு சென்று கொண்டிருந்தனர். அப்போது, தேவிகுளம் அருகே, லாக்காடு கேப் மலைப்பாதையில் இரண்டாவதாக வந்த கார் மேக மூட்டத்தால் ஓட்டுனரின் கட்டுப்பாட்டை இழந்து, 500 அடி பள்ளத்தில் தலைகீழாக கவிழ்ந்து விபத்தில் சிக்கியது. இதில் கார் அப்பளம் போல நொறுங்கியது. இந்த விபத்தில், ஒரே குடும்பத்தை சேர்ந்த நவுஷாத் (35) மற்றும் அவரது 8 மாத குழந்தை நிஷா ஆகியோர் சம்பவ இடத்திலே உயிரிழந்தனர். 5 பேர் படுகாயம் அடைந்தனர். தீயணைப்பு துறை மற்றும் போலீசார் வந்து மீட்பு பணியில் ஈடுபட்டனர்.

 படுகாயமடைந்த 5 பேரை மூணாறு டாடா ஹைரேஞ் மருத்துவமணையில் அனுமதித்து முதலுதவி அளிக்கப்பட்டது. பின்னர் கோலஞ்சேரி மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சேர்த்தனர். இது குறித்து போலீசார் வழக்குப்பதிந்து விசாரித்து வருகின்றனர்.

Related Stories: