நாகையில் நாளை மீனவர்கள் குறைதீர் கூட்டம்

நாகை, மே 11: நாகையில் நாளை (12ம் தேதி) மீனவர்கள் குறை தீர்க்கும் கூட்டம் நடைபெற உள்ளது என கலெக்டர் அருண் தம்புராஜ் தெரிவித்துள்ளார். நாகை மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில், நாளை (12ம் தேதி) காலை 10 மணியளவில் மீனவர்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டம் கலெக்டர் அருண் தம்புராஜ் தலைமையில் நடைபெற உள்ளது. எனவே கூட்டத்தில், மீனவர்கள் கலந்து கொண்டு தங்கள் கோரிக்கைகளை தெரிவித்து பயன்பெறுமாறு தெரிவித்துள்ளார்.

Related Stories: