காரைக்குடி, மே 3: காரைக்குடி நகராட்சி சார்பில் 15வது நிதிக்குழு திட்டத்தின் கீழ் உயிரி எரிவாயு உற்பத்திகூடம் துவக்க விழா நடந்தது. நகராட்சி ஆணையர் லட்சுமணன் வரவேற்றார். கலெக்டர் மதுசூதன்ரெட்டி தலைமை வகித்தார். நகர்மன்ற தலைவர் முத்துத்துரை முன்னிலை வகித்தார். திட்டத்தை துவங்கி வைத்து ஊரகவளர்ச்சித் துறை அமைச்சர் கேஆர்.பெரியகருப்பன் பேசுகையில், முதல்வர் மு.க.ஸ்டாலின் பல்வேறு துறைகளில் செயல்படுத்தப்படும் சிறப்பான திட்டங்களால் தமிழகம் வளர்ச்சி பாதையை நோக்கி செல்கிறது. இந்நகராட்சியில் வாரச்சந்தைகளில் சேகரமாகும் 8 டன் குப்பை மற்றும் தினசரி சேகரமாகும் குப்பைகளில் காய்கறி, பழம், பூ போன்ற கழிவுகளில் இருந்து மின்சாரம் தயாரிக்கப்பட உள்ளது.முதல்வரின் இதுபோன்ற சிறப்பான திட்டங்களை மக்களுக்கு அர்ப்பணிப்பதை மகிழ்ச்சியாக கருதுகிறேன்.