1,200 பேருக்கு நூறுநாள்

வேலை அடையாள அட்டைசேந்தமங்கலம், ஏப்.28: கொல்லிமலை ஒன்றியம், வாழவந்திநாடு ஊராட்சி பொதுமக்களுக்கு மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு திட்டத்தின் கீழ், தனிநபர் வேலைக்கான அடையாள அட்டை வழங்கும் நிகழ்ச்சி நடந்தது. ஊராட்சி மன்ற தலைவர் சங்கீதா ஈஸ்வரன், 1200 பேருக்கு தனிநபர் வேலைக்கான அட்டைகளை வழங்கினார். நிகழ்ச்சியில் துணைத் தலைவர் பிரபாகரன், ஊராட்சி செயலாளர், வார்டு உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.

Related Stories: