காரியாபட்டி அருகே எறும்பு பொடி சாப்பிட்டு மூதாட்டி பலி

காரியாபட்டி, ஏப். 25: காரியாபட்டி அருகே சொக்கனேந்தல் கிராமத்தில் வசிப்பவர் பாலகிருஷ்ணன் (58). இவரது தாயார் வண்ணக்கால் (92) அ.முக்குளம் அழகாபுரியில் தனியாக குடியிருந்துள்ளார். வயது முதுமையின் காரணமாக, மன விரக்தியில் இருந்ததாக தெரிகிறது. பாலகிருஷ்ணனின் மகன் அதிகாரி கண்ணன் நேற்று முன்தினம் அழகாபுரியில் உள்ள பாட்டி வீட்டிற்கு சென்று பார்த்த போது, வண்ணக்கால் எறும்பு பொடியை சாப்பிட்டு மயக்க நிலையில் இருந்துள்ளார். உடனே மதுரை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டு சிகிச்சை பலன் இன்றி இறந்து விட்டார். இதுகுறித்து அ.முக்குளம் போலீசார் வழக்குப்பதிந்து விசாரிக்கின்றனர்.

Related Stories: